Chikungunya: மழைக்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்றவை மக்களை அதிக அளவில் பாதிக்கின்றன. டெங்குவை போலவே சிக்குன்குனியாவும் கொசு கடிப்பதால் பரவும் ஒரு வைரஸ் நோய். இந்த நோய் முக்கியமாக ஏடிஸ் (Aedes) கொசுக்களால் ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி, மூட்டு வலி ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. பல சமயம் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அது குணமான பிறகும் மூட்டுவலியால் (Knee Pain) தொடர்ந்து அவதிப்படுவதை நாம் பார்த்துள்ளோம். இப்படி ஏன் நடக்கிறது? இதற்கான காரணம் என்ன? இதற்கான விடையை, வைஷாலி  மேக்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று பிரிவின் இணை இயக்குநர் டாக்டர் அகிலேஷ் யாதவிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். 


சிக்குன்குனியாவுக்குப் பிறகு மூட்டு வலி தொடர்வதற்கான காரணங்கள்:


சிக்குன்குனியாவுக்குப் பிறகு ஏற்படும் மூட்டுவலி ஒரு பொதுவான பிரச்சனை என்றும் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும் டாக்டர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். அந்த காரணங்களை பற்றி இங்கே காணலாம்.


வைரஸின் விளைவு: சிக்குன்குனியா வைரஸ் உடலில் நுழைந்தவுடன் அது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக மூட்டுகளில் வீக்கமும் வலியும் ஏற்படுகின்றது.


அழற்சி: பொதுவாக வைரஸ் உடலில் பரவும்போது, ​​மூட்டுகளைச் சுற்றி வீக்கம் அதிகரிக்கின்றது. இந்த வீக்கம் அவ்வப்போது நீண்ட நேரம் நீடித்து வலியை ஏற்படுத்துகிறது.


நோய் எதிர்ப்பு சக்தி மீது தாக்கம்: வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயலுக்கு வருகிறது. சில சமயங்களில், இந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை அதிகமாகி, மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | டெங்கு காய்ச்சலா... பிளேட்லெட் எண்ணிக்கையை எகிற வைக்கும் சூப்பர் ட்ரிங்க்... தயாரிப்பது எப்படி


மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம்: ஒருவர் ஏற்கனவே சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருந்து, அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் மூட்டுகளில் அதிக வலி ஏற்படக்கூடும். 


சிக்கன்குனியாவ்வுக்கு பிறகு தொடரும் மூட்டு வலிக்கான சிகிச்சை:


சிக்குன்குனியாவுக்குப் பிறகு தொடடும் மூட்டு வலிக்கு சிகிச்சையளிப்பதற்கு பல வழிகளை நாம் பயன்படுத்தலாம். 


ஓய்வு: இது மிகவும் முக்கியமானது. உடலுக்கு முழுமையான ஓய்வு கொடுப்பது அவசியம். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நேரத்தையும் சக்தியையும் வழங்குகிறது.


மருந்துகள்: வலியைக் குறைக்க, மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் உட்கொள்ளலாம்.


உடற்பயிற்சிகள்: மூட்டுகளை ஒரே நிலையில் வைத்திருப்பது வலியை அதிகரிக்கலாம். லேசான நீட்சி மற்றும் உடற்பயிற்சி மூட்டுகளின் இயக்க வரம்பை பராமரிக்க உதவும். வலியைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும். ஆனால் தீவிர உடற்பயிற்சிகள் ஆபத்தாகலாம்.


நீரேற்றம்: போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவி கிடைக்கும். 


சமச்சீர் உணவு: சமச்சீர் உணவ உட்கொள்வது அனைவருக்குமே நல்லது. புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது மிக முக்கியம். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் பருமன் முதல் ஹார்மோன் பிரச்சனை வரை... வெறும் வயிற்றில் சீரக நீர் செய்யும் மாயங்கள் பல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ