ஐதராபாத்தினை சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் P வம்சி(22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தினக்கூலி தொழிளாலியான இவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் தலையில் கோடாரியால் தாக்கி பின்னர் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.


மூதாட்டியின் பேரன் வீட்டிற்கு திரும்புகையில் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியினை அண்டை வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.


வீட்டில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிரா உதவியுடன் இச்சம்பவம் குறித்த விசயமறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் இப்புகாரின் பேரில் குற்றவாளி வம்சியினை கைது செய்துள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட வம்சியின் மீது, கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.