7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது ஊதிய உயர்வு குறித்த நல்ல செய்தி வந்துள்ளது. அகவிலைப்படியை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இதை அறிவிக்கக்கூடும் என்றும், ஹோலி பண்டிகைக்கு பிறகு நிதி அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்புக்கு பின், சம்பளம் உயர்த்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து முறையான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு, செய்திக்குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆனால், அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரித்து விட்டது தெளிவாகி விட்டது. 


தற்போது 38 சதவிகித அகவிலைப்படி கிடைக்கிறது


இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அமைச்சரவை புதன்கிழமை அகவிலைப்படி தரவுகளை மதிப்பாய்வு செய்தது. ஆனால், இதுவரை முறைப்படி இது பற்றி அறிவிக்கப்படவில்லை. 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வரவில்லை.


மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம்


ஜனவரி-பிப்ரவரி மாத அரியரும் சம்பளத்துடன் கிடைக்கும்


மார்ச் மாத சம்பளத்தில் இருந்து 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், சில ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து அதில் திருத்தம் செய்யும். ஆகையால், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி முதல் அமலுக்கு வரும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அரியர் தொகை மார்ச் மாத சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும். 


அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு சம்பளம் எவ்வளவு உயரும்?


அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் முறையே 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 18,000 அடிப்படை சம்பளமாக உள்ள ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீத அகவிலைப்படியாக 6,840 ரூபாய் டிஏ வழங்கப்படுகிறது. அகவிலைப்படி 42 சதவீதம் ஆன பிறகு அவர்களுக்கு ரூ.7,560 டிஏ கிடைக்கும். இதன் மூலம் அவர்களது மாத சம்பளம் ரூ.720 உயரும், ஆண்டு சம்பளம் ரூ.8,640 உயரும்.


அதே நேரத்தில், அதிகபட்சமாக ரூ.56,900 சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீத டிஏவில் ரூ.21,622 வழங்கப்படுகிறது. இது 42 சதவீதம் ஆன பிறகு அவர்களுக்கு ரூ.23,898 டிஏ கிடைக்கும். அவரது மாத சம்பளத்தில் ரூ.2,276 உயர்த்தப்படும். அதே சமயம் ஆண்டு ஊதியத்தில் ரூ.27,312 உயர்வு இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! 4% அகவிலைப்படி அதிகரிப்பு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ