ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல்செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது. மேலும் பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. 


தற்போது, இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.