புதுடெல்லி: ஏ.டி.எம். களில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை இன்று (ஜனவரி 1, 2017) முதல் அமலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 


இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கிடையே நாளை ஆங்கில புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டார்..


இந்நிலையில்  ஜனவரி 1-ம்திதே முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கடந்த 30-ம் தேதி அறிவித்தது. 


அதே சமயத்தில், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை. மேலும் ஏ.டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.