நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர், உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாகவும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பயண கட்டுப்பாடு காரணமாகவும் சுற்றுலாத்துறை அதிகப்படியாக பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | இனி வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட் செய்யலாம்!


மேலும், சுற்றுலாத்துறையில் கொரோனா பரவலுக்கு முன்பு 3.8 கோடி பேர் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் கொரோனாவின் 3 அலைகளுக்குப் பிறகு சுமார் 2.15 கோடி பேர் வேலை இழந்துவிட்டதாகவும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


இதையடுத்து, இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முதல் அலையில் 93 சதவீதமும், இரண்டாவது அலையில் 79 சதவீதம், மூன்றாவது அலையில் 64 சதவீதமும் குறைந்து விட்டதாக அவர் கூறினார்.


பாதிக்கப்பட்ட சுற்றுலா துறை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பயண ஏஜென்டுகள் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


இதையடுத்து, சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | கூகுளில் ரகசிய தேடல்களை நீக்குவது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR