புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை மறைக்க வேண்டும் என்ற அவசியமோ அல்லது எண்ணமோ தனது அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.  மேலும், முழு மீட்புப் பணியும் வெளிப்படையாக மக்கள் பார்வையில் நடைபெற்று வருவதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறப்பு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, ஒடிசா வெளிப்படைத்தன்மையை நம்புகிறது என்றார்.


"ஆரம்பத்தில் இருந்தே விபத்து நடந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் அதிகம் உள்ளனர். அனைத்தும் கேமராக்கள் முன்னிலையில் செய்யப்படுகின்றன," என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து! பயணிகளின் நிலை என்ன? கள நிலவரம்


"இறந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று ரயில்வே கூறியுள்ளது. நாங்களும் அதைச் சொன்னோம், ரயில்வேயின் தகவலின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை உள்ளது. ஆனால், எங்கள் பாலசோர் மாவட்ட ஆட்சியர் இறப்பு எண்ணிக்கையை சரிபார்த்துள்ளார், மேலும் இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 275 ஆக இருந்தது" என அவர் விளக்கம் அளித்தார்.


இறப்பு எண்ணிக்கையில் மாற்றம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அது குறித்து பதிலளித்த  தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் அது என்று தெளிவுபடுத்தினார்.  



விபத்து நடந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் நுழைவதற்கும் தடை இல்லை என்று கூறிய ஒடிசா  மாநில தலைமைச் செயலாளர், "மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழு பொதுமக்களின் பார்வையில் நடந்தன," என்று அவர் கூறினார்.


இறப்பு புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்துள்ளனர் என்றும் 182 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்.


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?


"ஒரு மாநிலத்தில் இருந்து, 182 பேர் காணாமல் போயிருந்தால், 61 பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், புள்ளிவிவரங்கள் எங்கே நிற்கும்?" என்று செய்தியாளர் சந்திப்பில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷிவினி வைஷ்ணா பதில் ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒடிசா மாநில அரசு தகவல்களின்படி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் 275 சடலங்களில், 108 மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது, அப்போதுதான் சடலங்களை, குடும்பத்தினர் தகனம் செய்ய முடியும் என்று ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா கூறினார்.


தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால், உடல்கள் வேகமாக அழுகும் நிலையில் உள்ளன. எனவே, இந்த சூழ்நிலையில், சட்டத்தின்படி சடலங்கலை அப்புறப்படுத்துவதற்கு அதிகபட்சமாக இன்னும் 2 நாட்கள் காத்திருக்கலாம் என்றும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா,தெரிவித்துள்ளதால், சடலங்கள் அடையாளம் காணப்படுவதில் கால தாமதம் ஆனால், என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன.


மேலும் படிக்க | OIL CUT: சவுதி அரேபியாவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! இதன் எதிரொலி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ