ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஆண்டு தோறும் நுழைவுத்தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது. பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டாக நடத்தப்படும் இத்தேர்வில், பிரதான தேர்வை ஆன்லைன் மூலமும் எழுதுவதற்கான விருப்பத்தேர்வை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.


இதன் தொடர்ச்சியாக ஐஐடி மற்றும் என்ஐடி-களில் சேர தகுதி அளிக்கும் அட்வான்ஸ்டு தேர்வையும் 2018 ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்த ஐஐடி முடிவு செய்துள்ளது.