பலரையும் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தான் இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவருடைய நிகர மதிப்பு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்ததின் கடும் உழைப்பின் தாக்கம் அவரது சொத்தின் மதிப்பில் எதிரொலிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணக்கார நகைச்சுவை நடிகர் 


பிரபல தெலுங்கு நடிகரும் நகைச்சுவை நடிகருமான கன்னேகண்டி பிரம்மானந்தத்தின் சொத்துகளின் நிகர மதிப்பு $50 மில்லியனுக்கும் அதிகமாகும். சொகுசு கார்கள் வைத்திருப்பதில் விருப்பம் கொண்டவர் நடிகர் பிரம்மானந்தம்.


நடிகர் பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு


பிரம்மானந்தம் சினிமாவில் நடிப்பதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். 67 வயதான பழம்பெரும் நட்சத்திரம் இன்றுவரை 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.


கின்னஸ் உலக சாதனையைப் படைத்த நடிகர் பிரம்மானந்தம்


அதிக திரைப்படங்களில் நடித்த வாழும் நடிகர் என்ற கின்னஸ் சாதனையை பிரம்மானந்தம் படைத்துள்ளார்.அப்போது அவர் 857 படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை சுமார் 1200 இருக்கும்.


மேலும் படிக்க | இறந்தவர்களை மீண்டும் ’சிந்திக்க’ உயிர்ப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு!


பத்மஸ்ரீ விருது


கலைக்கான பங்களிப்பிற்காக, நடிகர் பிரம்மானந்தத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் இவர்.


விருதுகள்


பிரம்மானந்தம், ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதுகள் ஆறு மற்றும் ஆறு சினிமா விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது மற்றும் மூன்று தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.


சூப்பர்ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிரம்மானந்தம் நகைச்சுவை நடிகர் என்பது உலகத்திற்கு தெரிந்த உண்மை என்றால், அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாது. தமிழ் நடிகர் சிவக்குமார் போலவே, நடிகர் பிரம்மானந்தம் ஓவியங்களை வரைவதில் வல்லவர்.


 



தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம்


1985 இல் ஸ்ரீ தடவதாரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். சத்யநாராயணா வெஜெல்லா இயக்கிய இந்தப் படம் 1988 இல் வெளியானது.


சொகுசு கார்கள்


ஆடி ஆர்8, ஆடி க்யூ7, கருப்பு நிற சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் என பல சொகுசு கார்களுக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்குரியவர் பிரம்மானந்தம்.


ஏழ்மையில் இருந்து உயர்ந்த மனிதர்


ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்தம், இன்று இந்தியாவில் அதிக சொத்து படைத்த நகைச்சுவை நடிகராக, செல்வந்தராக உயர்ந்த மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?


தச்சுத் தொழிலாளியின் மகன்


வறிய குடும்பத்தில், தச்சுத் தொழிலாளியின் மகனாக பிறந்த பிரம்மானந்தம், வறுமையின் அர்த்தத்தையும் பணத்தின் உண்மையான மதிப்பையும் இளம் வயதிலேயே புரிந்துக் கொண்டவர். 


முதுகலை பட்டதாரி


முதுகலை பட்டதாரியான பிரம்மானந்தம், படித்த பிறகு, கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வந்தார். ஆனால், சினிமாவில் இருந்த ஆர்வம் காரணமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.


பிரம்மானந்திற்கு உதவிய மூன்று பேர்


பிரம்மானந்தத்தின் மிமிக்ரி திறமையை தெரிந்துக் கொண்ட இயக்குநர் ஜந்தியாலா, நடிகர் சிரஞ்சீவி மற்றும் டி. ராமாநாயுடு ஆகிய மூன்று பேர் அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்க அவருக்கு உதவினார்கள்.


’மொழி’ கடந்த நடிகர் பிரம்மானந்தம்


நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழில் அவர் நடித்த ’மொழி’ திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இந்தத் திரைபப்டத்தில் அவருக்கு கிடைத்த புகழ், வேறு எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் கிடைத்திருக்குமா என்று சொல்ல முடியாது.


 மேலும் படிக்க | புது இராமாயண கதையில் இராவணனாக ‘ராக்கி பாய்’ யஷ்! ராமன்-சீதை யார் தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ