பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறை கடந்தவாரம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.8 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல் அவருடைய கணவர் ஷைலேஷ் குமார் மற்றும் பண மோசடியில் முக்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படும் மிஷைல் பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


லாலுபிரசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ 12 இடங்களில் சோதனை நடத்திய மறுநாளில் அமலாக்கத்துறை இந்த சோதனையில் ஈடுபட்டது.


இந்நிலையில் பண மோசடி தொடர்பாக மிசா பாரதியை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜர் ஆகும்படி டெல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 


மேலும் மிசா பாரதியின் கணவர் ஷைலேஷ் குமாருக்கும் விரைவில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.