ஹரியானாவின் குர்குரம் கிராம பகுதியில் 3 வயது சிறுமியின் நிர்வாணமான உடலை சடலமாக காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவை சேர்ந்த தம்பதியினர் நேற்று சரியாக காலை 11 மணியளவில் தனது மூன்று வயது குழந்தையை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அப்பகுதி காவல்துறையினர் பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்துள்ளனர்.  


இந்நிலையில், ஹரியானாவின் குர்குரம் Sector 66  கிராமப்பகுதியில் ஒரு மூன்று வயது குழந்தையின் உடல் நிர்வாணமாக சடலமாக அப்பகுதி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து புகார் கொடுத்துள்ளார் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, தனது காணாமல் போன குழந்தை இதுதான் என பெற்றோர் அடையாளம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, காவல்துறையினர் மீண்டும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.