டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அவர்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அவர்கள் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அவரக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கெஜிரிவால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அவர்களும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.



டெல்லி அரசிற்கும், மத்திய அரசிற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அவர்களுக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அவர்களுக்கும் இடையே அரசியல் ரீதியாக இதுவரை பரஸ்பர பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததில்லை.


தங்கள் கொள்கைகளில் வேறுபாடுகளை கொண்டிருக்கும் இரு கட்சி தலைவர்களும் ட்விட்டரின் வாயிலாக பேசிக்கொண்டது நெட்டீசன்கள் மத்தியில் பெரும் தாக்கதினை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது ட்வீட்டினை இணைய பிரியர்கள் பெரும் அளவில் பகிர்ந்து வருகின்றனர்!