சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல் மற்றும் மகர விளக்கு சீசனுக்காக நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை மற்றும் ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு, மக்கள் உடனடியாக கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்ய முடியாது. கேரளா அரசு இதற்கான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. கேரள முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் தினமும் 80,000 பேர் முன்பதிவின் மூலம் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் வருகைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நடிகை ஆலியா பட்டிற்கு இப்படி ஒரு விசித்திர நோய்! உங்களுக்கும் ஏற்படலாம்!


ஆனால் கேரள அரசின் இந்த முடிவால் பந்தளம் அரச குடும்பத்தினரும், சில இந்து அமைப்புகளும் மிகுந்த கோபத்தில் இருந்தனர். அவர்கள் தரப்பில் இருந்து கடந்த ஆண்டு செய்ததைப் போலவே, உடனடி தரிசன வசதியை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் பொதுமக்களிடமும் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதே போல சில அரசியல் கட்சிகளும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் இது தவறான யோசனை என்று தெரிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நல்லது தான் என்றாலும், நேரிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 


இந்த நிலையில், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்யாவிட்டாலும் சபரிமலைக்கு செல்லலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முன்பதிவு செய்யாவிட்டாலும், அனைவருக்கும் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு உள்ளது. நேற்று நடைபெற்ற கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது முதல்வர் பினராயி விஜயன் இதனை தெரிவித்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு சபரிமலை கோயிலுக்கு தினமும் 70,000 பேர் ஆன்லைனில் செல்ல முன்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவுகள் நிரம்பிய பிறகு, 10000 பேர் வரை முன்பதிவு இல்லாமல் அனுமதிக்கப்பட உள்ளனர்.


மக்கள் வழக்கமாக தங்கள் வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றாலும், முன் பதிவு செய்யாமல் சில பக்தர்கள் வரக்கூடும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது. எனவே அதனை சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேரளா அரசு மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, கேரளா சபரி மலைக்கு தினமும் சுமார் 20000 பேர் நேரில் டிக்கெட் வாங்கிச் சென்றனர். 2022-23 சீசனில் மொத்தம் 3,95,000 பேர் சபரி மலைக்கு சென்றுள்ளனர். அடுத்த சீசனில் அந்த எண்ணிக்கை 4,85,000 ஆக உயர்ந்தது.


மேலும் படிக்க | சல்மான் கானுக்கு உதவினால் கொல்லப்படுவார்கள்! மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ