புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த கொடுமை தான் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை கடத்தும் கும்பல் செய்த வேலையா என்ற சந்தேகம் முதலில் எழுந்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தற்போது காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் கடந்த மார்ச் 2-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி திடீரென மாயமானார். பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர்.


அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு சிசிடிவியில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் வீடியோ இருந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சிறுமி குறித்து தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரித்த போதும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் வழக்கு ஸ்தம்பித்து நின்றது. 


மேலும் படிக்க | பாஜக கூட்டணியில் இணைந்த சரத்குமார்! எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது?


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை கடத்தும் கும்பல் களமிறங்கி இருப்பதாக ஒரு தகவல் பரவலான செய்தி வாட்ஸ்-அப் குரூப்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனால் காணாமல் போன சிறுமியை அந்த கும்பல் தான் கடத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது.  இந்த சூழலில் தான் சோலை நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாக முத்தியால்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.


இதையடுத்து போலீஸார் அங்குவிரைந்து சென்று பார்த்தபோது, காணாமல் போன சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் தந்தையை அழைத்து வந்து சிறுமியை அடையாளம் காணச் சொன்னபோது அவர் தனது மகள் தான் என உறுதி செய்தார்.  


இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. போலீஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியில் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்: முத்தரசன்


இந்நிலையில் இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணாஸ் என்ற 19 வயது இளைஞரும், விவேகானந்தன் என்ற 60 வயது முதியவரும் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. 


சிறுமியை இவர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது சிறுமியை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி முழுவதும் பல்வேறு தரப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Lok Sabha Election: தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்!


பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி, தனது பதிவில், புதுச்சேரியில் கஞ்சா போதையில் 9 வயது சிறுமியை கொன்று சாக்கடையில் வீசிய செய்தியைப் பற்றி எழுதியுள்ளார். 



அதோடு, நமது பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தையை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றால், அவளுக்காக நம்மால் குரல் கொடுக்க முடியவில்லை என்றால், இந்த கொடூர மிருகங்களுக்கு மரண தண்டனை விதிக்கவில்லை என்றால், நாம் எதைப்பற்றியும் பேச அருகதை இல்லாதவர்களாகி விடுவோம் என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். 


இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பூ, ஒரு தாயாக தனது மனம் புண்பட்டுள்ளதாகவும், சிறார்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், உயிரிழந்த சிறுமியை திருப்பி கொண்டு வரமுடியாது என்றாலும், குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்காமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் முழுவதும் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.


மேலும் படிக்க | பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் - செல்வப்பெருந்தகை விளாசல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ