Karnataka Shocking Murder News: கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் துயரமான ஒரு சம்பவம் நேற்று நடந்துள்ளது. திருமணம் காலையில் நடந்த நிலையில், மாலையில் மணமகன், மணப்பெண்ணை கொலை செய்தது அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியை தொடர்ந்து காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் (KGF) பகுதியின் சம்பரசபஹள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான நவீனுக்கும், 19 வயதான லிகிதாவுக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. சம்பரசபஹள்ளி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் உறவினர்களுடன்  மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர். அதன் பின்னர் தான் சம்பவம் நடந்திருக்கிறது. 


ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமணப்பெண்


இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருஆண்டர்சன்பேட்டை போலீசார்  கூறுகையில், மண்டபத்தில் இருந்து லிகிதா மற்றும் அவரது குடும்பத்தினரை நவீன் அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தம்பதியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் புதுமண தம்பதியர் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இருவரும் ஒரு அறைக்குச் சென்று கதவை அடைத்துவிட்டனர். சில நிமிடங்களில் அறைக்குள் இருந்து இருவரும் சண்டையிடும் சத்தம் கேட்கவே, உறவினர்கள் பதறி அடித்துக்கொண்டு கதவை திறக்கும்படி கூறியுள்ளனர்.



மேலும் படிக்க | தனியாக நின்ற பெண்ணிடம் அடாவடி...தகாத முறையில் பேசிய போதை ஆசாமி


நீண்ட நேரம் கதவை திறக்காததால் ஒரு சிலர் ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தபோது, நவீன் பெரிய கத்தியை வைத்து நிகிதா தாக்கிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதனால் பதறிய உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லிகிதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார், நவீனும் காயங்களுடன் இருந்தார். 


காரணம் என்ன?


உடனே உறவினர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் தம்பதியர் இருவரையும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், மணப்பெண் லிகிதா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நவீனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


திருமணமான சில மணிநேரங்களில் மணமகளை வெட்டிக் கொல்லும் அளவிற்கு இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை என்பது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. மேலும், அந்த கத்தியை நவீன் எங்கிருந்து பெற்றார் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. லிகிதா கொலை செய்யப்பட்ட நிலையில், நவீனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்குள் என்ன பிரச்னை நடந்தது என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். 


நவீன் அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். லிகிதா இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். தற்போது இதுகுறித்து ஆண்டர்பேட்டை காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: பிரதமர் மோடி நாளை மறுநாள் நேரில் ஆய்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ