துபாயில் மாரடைப்பால் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!


துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து இன்று மும்பை கொண்டுவரப்படுகிறது.


இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில், "பிரேதப் பரிசோதனை முடிவடைந்துவிட்டது. அவரது உடல் திங்கள்கிழமை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.


தடயவியல் ஆய்வகங்களின் அறிக்கைகளுக்காக ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அவரது இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மும்பையில் அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


முன்னதாக இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கள் செய்திகளை பதிவுசெய்தனர். மேலும் அவரது பூத உடலின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.


அனில் அம்பானியின் தனி விமானம் ஸ்ரீதேவியின் பூதவுடலை துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!