ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 25). இவருடைய இரண்டாவது கணவர் பிரகாஷ். லலிதாவுக்கு முதல் கணவருக்கு பிறந்த 4 வயது சிறுமி இருக்கிறார். லலிதாவும், பிரகாசும் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவருக்கும் அந்த சிறுமியை பிடிக்காது. லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, பெற்ற மகள் என்றும் பாராமல், அச்சிறுமியை சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்தார்.அவளை குழந்தைகளுக்கான ஆதரவு மையத்துக்கு லலிதா கூட்டிச் சென்றார். சாலை ஓரத்தில் அவள் கிடந்ததாக அவர் கூறினார். ஆனால், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. 


இதை தொடர்ந்து தெலுங்கானா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின்பேரில், லலிதா மற்றும் அவரது இரண்டாவது கணவர் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அச்சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார்.