மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கடந்த 1959-ம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில் மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் கடமையின்போது உயிர்நீத்த காவல் துறையினருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.