லூதியானா: பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் 4 வயது குழந்தையை கடத்த வந்த திருடனை பிடித்த குடும்ப உறுப்பினர்கள். லூதியானாவின் ரிஷி நகர் பகுதியில் உள்ள குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முழு சம்பவமும் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகி உள்ளது. மேலும் குழந்தையை கடத்த வந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சியில், வீட்டிற்கு முன்பு தெருவில் இரண்டு பெண்மணிகள் தங்கள் குழந்தைகளுடன் தனித்தனியே கட்டலில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த திருடன் அவர்கள் நன்றாக தூங்குகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்துவிட்டு, பின்னர் சென்று சைக்கிள் ரிக்‌ஷாவை எடுத்து வந்து, அவர்களின் அருகில் நிறுத்தி, ஒரு படுக்கையில் தூங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை தூக்கி ரிக்‌ஷாவில் வைக்கிறார். அப்பொழுது மற்றொரு படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண் குழந்தையின் அழுகையைக் கேட்டு எழுந்தபோது, அதிர்ச்சியடைந்த பெண், அந்த திருடனை தாக்க முற்படுகிறார். அதேவேலையில் ரிக்‌ஷாவில் இருக்கும் குழந்தையை மீட்பு அணைத்துக் கொள்கிறார். பெண்மணிகளின் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்குள் திருடன் சைக்கிள் ரிக்‌ஷாவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடி விடுகிறான்.  


<iframe width="100%" height="350" src="https://zeenews.india.com/hindi/india/states/video/video-man-tried-to-kidnap-4-years-old-girl-watch-the-cctv-footage/575000</iframe>


இந்த சம்பவம் செப்டம்பர் 17 மதியம் 1.15 மணியளவில் நடந்ததாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சி மோளம் திருடனை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.