Viral News: மைசூரு நகரம் சுண்ணதகேரி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு தான் உண்மை தெரிந்தது. தாலிகட்டும் நேரத்தில் மணமகள் மயங்கி விழக் காரணம் என்ன என்பதைக் குறித்து பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மைசூரு நகரம் சுண்ணதகேரி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்ணுக்கும், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் செய்திருந்தனர். மைசூரு நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


முகூர்த்த நேரம் வந்தபோது புரோகிதர், மணமகனை, மகளின் கழுத்தில் தாலி கட்டும்படி கூறினார். இதையடுத்து மணமகன் தாலி கட்ட தயாரான போது, திடீரென்று மணமகளான இளம்பெண் மயங்கி விழுந்தார். இதைபார்த்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கீழே விழுந்த மணமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதையடுத்து மணமகள் சகஜ நிலைக்கு வந்தார். இதையடுத்து மணமகன், இளம்பெண் கழுத்தில் தாலிக்கட்ட மீண்டும் தயாரானார். அப்போது தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என மணமகளான இளம்பெண் குண்டை தூக்கி போட்டார்.


மேலும் படிக்க: இணையத்தை இளக வைத்த அண்ணன் தங்கை பாசம்: கதறி அழுத அண்ணன், வைரல் வீடியோ


மேலும் இந்த திருமணத்தில் இருந்து தப்பிக்கவே மயங்கி விழுவது போல நடித்ததாகவும் தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார். 


இதைகேட்டு இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இளம்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் மணமகன் குடும்பத்தினர், மணமகள் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமணத்துக்கான செலவு ரூ.5 லட்சத்தை உடனடியாக தர வேண்டும் என்று மணமகன் குடும்பத்தினர் விடாப்பிடியாக பேசினர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  


மேலும் படிக்க: திருமணத்தை நிறுத்தி நாயை காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ


இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர். போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மணமகளான இளம்பெண் சுண்ணதகேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலை கைவிட்டு திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் தெரிவித்தார். 


இந்த நிலையில், மணமேடையில் அமர்ந்திருந்தபோது காதலன் நியாபகம் வந்ததால் மனம் மாறி, நாடகமாடி இந்த திருமணத்தை நிறுத்தியதாகவும் இளம்பெண் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மைசூருவில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க: மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR