மும்பையை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பாபா சித்திக் கொலைக்கு தாங்கள் தான் காரணம் என்று பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களும் இதே போல கொல்லப்படுவார்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எம்எல்ஏ மற்றும் முன்னாள் மகாராஷ்டிர அமைச்சருமான பாபா சித்திக் பாந்த்ரா ஈஸ்ட் என்ற இடத்தில் அவரது மகனின் அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்று மக்கள் சந்தேகிக்கத் தொடங்கினர். அடுத்த சில மணி நேரங்களில் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஷிபு லோங்கர் என்ற நபர் ஃபேஸ்புக்கில் இதனை உறுதிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள்


எதற்காக கொல்லப்பட்டார் சித்திக்?


சல்மான் கானுடன் நட்பாக இருந்ததாலும், தேடப்படும் தீவிரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்ததாலும் சித்திக் கொல்லப்பட்டதாக ஷிபு லோன்கர் தெரிவித்துள்ளார். சல்மான் கான் வீட்டிற்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அனுஜ் தப்பன் என்ற நபருக்காகவும் இந்த கொலை இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனுஜ் தப்பன் லாக்கப் மரணம் அடைந்து இருந்தார். அனுஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும், போலீஸ் தான் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள். "எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத்துக்கு உதவுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று லோன்கர் தனது பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.


மேலும் இருவர் மீதும் துப்பாக்கி சூடு!


நவம்பர் 2023ல், கனடாவின் வான்கூவரில் உள்ள ஜிப்பி கிரேவால் என்ற பாடகரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. கிரேவால் சல்மானை மிகவும் நல்லவர் என்றும், அவர் தனது சகோதரர் போன்றவர் என்றும் கூறியதால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பிஷ்னோய் கும்பல் கூறியது. முன்னதாக செப்டம்பரில், ஏபி தில்லான் என்ற மற்றொரு பாடகரும் வான்கூவரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ஏபி தில்லான் தனது 'ஓல்ட் மணி' பாடலுக்கான இசை வீடியோவை வெளியிட்ட பிறகு கொல்லப்பட்டார், அதில் சல்மான் கான் நடித்திருந்தார்.


சல்மானுடன் பகை ஏன்?


2022 ஆம் ஆண்டில் சித்து மூஸ்வாலா என்ற இசையமைப்பாளரின் மரணத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று பிஷ்னோய் கும்பல் அறிவித்தது. அதில் இருந்து அவர்கள் மிகவும் பிரபலமாக உள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பு ஜோத்பூர் என்ற இடத்தில் கரும்புலிகள் (பிளாக்பக்) என்ற சிறப்பு விலங்கை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார் சல்மான் கான். இந்த சம்பவத்திற்கு பிறகு சல்மான்கானை கொல்ல விரும்புவதாக அந்த கும்பல் தெரிவித்தது. பிஷ்னோய் இன மக்கள் கரும்புலிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் மற்றும் அவற்றை புனிதமானவையாக கருதுகின்றனர். சல்மான்கான் அவற்றை வேட்டையாடியதால் மிகவும் கோபமடைய செய்துள்ளது.


லாரன்ஸ் பிஷ்னோய் என்ன சொன்னார்?


2018 ஆம் ஆண்டு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற நபர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, "சல்மான் கானை நாங்கள் கொல்வோம், நாங்கள் அவரை ஏதாவது செய்தால் அனைவருக்கும் தெரியும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, மக்கள் என்னை காரணமின்றி குற்றம் சாட்டுகிறார்கள்" என்று கூறினார். தற்போது சித்திக் கொலை காரணமாக பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டைச் சுற்றி அதிக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் போன்ற முக்கிய தலைவர்கள் வசிக்கும் தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | யார் இந்த பாபா சித்திக் யார்? எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்? முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ