கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக IPL போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரில் விளையாட, கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வளரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இவருக்கு பதிலாக கர்நாடகாவின் வேகப்பந்து வீச்சாளர் பர்ஸித் கிருஷ்ணா இவரது இடத்தை நிரப்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-வயது இளம் வீரர் 2016-17 ஆண்டில் நடைப்பெற்ற விஜய் ஹஜார் கோப்பை போட்டியில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பர்ஸித் கிருஷ்ணா, இந்த ஆண்டின் முற்பகுதியில் T20 போட்டிகளில் அறிமுகம் ஆனார். குறைந்த காலக்கட்டத்திலேயே ரசிகர்கள் கவணத்தினை ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.