தந்தையின் திடீர் இறப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா சென்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, அணிக்கு திரும்புகிறார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11-வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தனது ஒட்டுமொத்த ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியில் மாஸ் காட்டி வருகிறது.


இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 5 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.இந்த நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சிற்கு மேலும் ஒரு பின்னடைவாக சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.


இதை தொடர்ந்து, தனது தந்தையின் திடீர் இறப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா சென்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, அணிக்கு திரும்புகிறார். இவர் அடுத்தப் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது. இத்தகவலை சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.