IPL 2018 தொடரின் 32-வது போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் 32-வது போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டெல்லி பெரோஷ் ஷா மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.


ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் போட்டி தலா 18 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது.


முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 50(35), ரிஷாப் 69(29) என அடுத்தடுத்து வந்த வீரர்களும் ரன்களை குவிக்க டெல்லி அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.


பின்னர் DLS முறைப்படி ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டது. எனினும் ராஜஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.