ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதிக்கொண்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


எனவே, பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 118 ரன்கள் குவித்தது.  


இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமி்றங்கியது. 


இந்நிலையில் ஆரம்பம் முதலே ஐதராபாத் அணியினர் சிறப்பான முறையில் பந்து வீசி வந்ததால், மும்பை அணியினர்  தங்களதுவிக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். 


தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். 


மணிஷ் பாண்டே 16 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட, ஷாகிப் ஹசன் 2 ரன்னில் ரன் அவுட்டானது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. 


இறுதியில் மும்பை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 87 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.


இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது.