காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரீ காந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, காமன்வெல்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 


இதையடுத்து, இன்று நடைபெற்ற பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதியின் பைனலில் செய்னா நேவால், சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.


அவரை தொடர்ந்து, மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைந்துள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 


இந்நிலையில், தற்போது காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரீ காந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மலேசிய வீரர் சாங் வீ லீயிடம் 2-1 என்ற செட்கணக்கில் போராடி வீழந்தார். 



இதன்மூலம், இந்தியா தற்போது  26 தங்கம் 17 வெள்ளி, 19 வெண்கலப்பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.