7வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்: ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஏனெனில் தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி இந்த உயர்வுக்கான செய்தி நவராத்திரி பாண்டிக்காய் மற்றும் தீபாவளிக்கு இடையே, மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது. இது நடந்தால், அக்டோபர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளம், மத்திய ஊழியர்களின் கணக்கில் நேரடியாக வரலாம். இதனுடன் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகையும் அவர்களது கணக்கில் அனுப்பி வைக்கப்படும்.


தீபாவளிக்கு முன் அகவிலைப்படி-அகவிலை நிவாரணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது:
உண்மையில், 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரிக்கிறது, இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் பொருந்தும் என்று கருதப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு, அறிவிக்கப்பட்டதும், ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். பொதுவாக, ஹோலிக்கு முன் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வும் மற்றும் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்வைவும் அரசாங்கம் அறிவிக்கரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?


வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு, தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பணவீக்கத்தின் ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அதாவது ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு DA மற்றும் DR ஐ அதிகரிக்கிறது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியதன் நோக்கம், பணவீக்கம் அதிகரிப்பதால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே.


அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம்:
ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள AICPI தரவுகளின்படி, இம்முறையும் அகவிலைப்படியில் நான்கு சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.


DA 42ல் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
இந்நிலையில் இந்த அதிகரிப்பு நடந்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். இது நடந்தால் அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெரிய அளவில் உயரக்கூடும். அகவிலைப்படி உயர்வு என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்:
தற்போது, ​​அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், பண்டிகைக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் பெரிய பரிசு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், நாட்டிலுள்ள சுமார் 47.58 லட்சம் மத்திய ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.


மேலும் படிக்க | Bank Holidays October: அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ