7th Pay Commission Latest Updates: நீண்ட காத்திருப்புக்கு பிறகு, இப்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இப்போது அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனுடன், ஊழியர்களின் HRA-வும் அதிகரித்துள்ளது. அதாவது, ஊழியர்களின் செப்டம்பர் சம்பளம் இப்போது இரட்டை போனசுடன் வரும்.


DA உடன் HRA அதிகரித்தது


அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டும். தற்போது அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.


செலவினத் திணைக்களம் 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் அகவிலைப்படி 25% ஐத் தாண்டினால் எச்.ஆர்.ஏ திருத்தப்படும் என்று கூறப்பட்டது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளதால், HRA-வும் திருத்தப்பட்டது.


HRA நகரத்தின் அடிப்படையில் மாறுபடும்


அரசாங்க உத்தரவின்படி, நகரங்களின்படி, எச்.ஆர்.ஏ, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆகவும் இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission நல்ல செய்தி: குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பை அதிகரித்தது மத்திய அரசு


HRA இப்போது எவ்வளவு உயரும்


ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தைத் தாண்டினால், அது Z பிரிவில் இருந்து Y வகைக்கு மேம்படுத்தப்படும். அதாவது, அங்கு கிடைக்கும் HRA, 9% க்கு பதிலாக, 18% ஆக உயரும். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், X பிரிவில் இருக்கும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ 5400, 3600 மற்றும் ரூ .1800 ஆகும். செலவினத் திணைக்களத்தின்படி, அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, ​​எச்ஆர்ஏ X, Y மற்றும் Z நகரங்களுக்கு 30%, 20% மற்றும் 10% ஆக மாற்றப்படும். 


சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்


7 வது ஊதியக்குழு (7th pay commission) ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும். 18,000 அடிப்படை சம்பளத்தில் 17%-ன் படி, ஊழியர்களுக்கு 2021 ஜூன் வரை ரூ .3060 டி.ஏ. கிடைத்துக்கொண்டிருந்தது. ஜூலை 2021 முதல், இப்போது 28% அகவிலைப்படி என்ற அளவில், மாதத்திற்கு ரூ .5040 டி.ஏ. கிடைக்கும். அதாவது மாத சம்பளத்தில் ரூ. 1980 (5040-3060 = 1980)  அதிகமாக வரும். இதே முறையில், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் முடிவு செய்யப்படும். டிஏ அதிகரித்த பிறகு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும் என்பதை ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தின் படி கணக்கிடலாம்.


ஊதியம் இந்த அளவுக்கு அதிகரிக்கும்


குறைந்தபட்ச டிஏ அதிகரிப்பு (DA Hike) ரூ .5040 ஆகவும், குறைந்தபட்ச எச்ஆர்ஏ அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் ரூ .1800 ஆகவும் இருக்கும். அதாவது, செப்டம்பரில் வரும் சம்பளத்தில் ரூ .6840 (5040 + 1800) அதிகரிப்பு இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR