7வது ஊதியக்குழு செய்தி: மத்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. இதையடுத்து 5 மற்றும் 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கும் அரசு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது இந்த ஊழியர்களின் அரசு டிஏ-வை 13% உயர்த்தியுள்ளது. இனி அவர்களுக்கும் மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அளவில் டிஏ வழங்கப்படும். 7வது ஊதியக் குழுவின் பலனை இதுவரை பெறாத மத்திய ஊழியர்களும் சிலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நிதி அமைச்சகத்தின் முக்கிய முடிவு


5வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களின் டிஏ அதிகரிக்கப்பட்டு 381 சதவீதமாகும் எனவும், 6வது ஊதியக்குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் டிஏ 196 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு 203 சதவிகிதமாகும் எனவும் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது. 


அதாவது இது 7% அதிகரிக்கும். இந்த ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட டிஏ-வின் பலன் ஜனவரி 2022 முதல் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஊதிய உயர்வுக்கான சூத்திரத்தில் மாற்றம் 


7வது ஊதியக்குழுவில் 3 சதவீதம் உயர்வு


சமீபத்தில் மத்திய மத்திய அரசு, ஊழியர்களின்  அகவிலைப்படியை 3% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அதன் பலன் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுடன், மத்திய ஊழியர்களின் இதர கொடுப்பனவுகளும் உயரும். இதன் மூலம் பயணப்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவையும் அதிகரிக்கும்.


அகவிலைப்படியை எவ்வாறு கணக்கிடுவது?


ஊழியர்களின் அகவிலைப்படி அல்லது டிஏ அதிகரிப்பு அவர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 21 ஆயிரம் எனில், அவருக்கு இப்போது 31% க்கு பதிலாக 34% என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படும். அதாவது, இப்போது அடிப்படை சம்பளத்தில் 34 சதவீத தொகை சம்பளத்துடன் சேர்க்கப்படும். இது தவிர, மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிப்பால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.


எந்த ஊழியர்களுக்கு 7வது ஊதிய பலன் கிடைக்கவில்லை


இதுவரை எந்தெந்த ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பலன் கிடைக்கவில்லை என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். மத்திய துறைகள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் (அடானமஸ் அமைப்புகள்) பணிபுரியும் சில ஊழியர்கள் இன்னும் 7வது ஊதியக்குழுவில் சேர்க்கப்படவில்லை. 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி பணிபுரியும் இந்த ஊழியர்களுக்கு மத்திய அரசு மொத்தமாக 7லிருந்து 13 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தி பம்பர் ஆதாயத்தை வழங்கியுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும்.


மேலும் படிக்க | ஊழியர்களே உஷார்: EPFO ஊதிய வரம்பில் மாற்றம், கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR