7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஊதிய உயர்வு கனவு கலைந்தது

Fitment Factor Update: அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த அப்டேட் வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2022, 11:16 AM IST
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றிய பெரிய புதுப்பிப்பு.
  • இந்த ஆண்டு ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படாது.
  • கொரோனா தொற்று மற்றும் பணவீக்கம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஊதிய உயர்வு கனவு கலைந்தது title=

7வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு சமீபத்தில் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த அப்டேட் வந்துள்ளது. 

இந்த ஆண்டு ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசாங்கம் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் அதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். ஆனால், ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்காது!

ஆதாரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்காது என்று தெரிகிறது. தற்போது, ​​ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதற்கான விஷயத்தில் அரசு ஆதரவாக இல்லை. கொரோனா தொற்று (கோவிட்-19) மற்றும் பணவீக்கம் காரணமாக, இந்த கூடுதல் நிதிச்சுமையை தற்போது அதிகரிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஊதியக்குழு செயல்பாடு வரை ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து எந்த முடிவையும் அரசு எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த ஊதியக்குழு செயல்பாடுகள் எப்போது இருக்கும் என்பது பற்றிய தெளிவும் இல்லை. அவ்வப்போது ஊதியத்தை உயர்த்தும் ஒரு சூத்திரத்தை உருவாக்கவும் அரசு முயற்சித்து வருகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ்

நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்தது

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. மறுபுறம், மார்ச் மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் அறிவிக்கப்படலாம் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57ஐப் பெருக்கி மத்திய ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்படுகிறது. 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு, 6வது ஊதியக்குழுவின் ஊதியக்குழுவுடன் தர ஊதியம் சேர்த்து அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. இதில், தற்போதைய நுழைவு நிலை சம்பளம், ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆல் பெருக்கப்பட்டது. இதன் மூலம் ஊழியர்களின் ஊதியக் குழுவிற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | 7th Pay Commission அதிர்ச்சி செய்தி: டிஏ அதிகரிப்பில் தடை வரக்கூடும், காரணம் இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News