7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு லேட்டஸ் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்து விட்டது. ஜூலை மாத ஏஐசிபிஐ எண்கள் வெளியாகிவிட்டன. இதன் பிறகு, 2024 ஜனவரி முதலான அகவிலைப்படி உயர்வு 50 சதவிகிதம் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இது ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்றத்துக்கு வழிவகுக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 



ஜூலை ஏஐபிசிஐ குறியீட்டில் முன்னேற்றம்


2023 ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டன. இந்த குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை, 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ளது. இதுவே, ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளாகவும் மே மாதத்தில் குறியீட்டு எண் 134.7 புள்ளிகளாகவும் இருந்தன.


ஜூன் மாதத்தில் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரித்த நிலையில், மே மாத புள்ளிவிவரங்களின்படி, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்ததால் மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரியவந்தது.


தற்போது 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ள நிலையில், ஜனவரி முதல் மத்திஅ அரசு ஊழியர்களுக்கு 50 சதவிகித டிஏ அமலுக்கு வரும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்


டிஏ உயர்வு புத்தாண்டு முதல் அமலுக்கு வரும்


2024 புத்தாண்டு தொடங்கியதும், அந்த மாதம் முதல், மாத ஊதியத்துடன்  அகவிலைப்படி உயர்வு  கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வின் பலன் 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வின் பலன் நேரடியாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு 


அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுதோறும் இரு முறை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் அதை அங்கீகரிக்கிறது. தொழில்துறை பணவீக்க புள்ளிவிவரங்களுடன் (AICPI) இணைத்து தொழிலாளர் அமைச்சகம் இதை தீர்மானிக்கின்றது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் அகவிலைப்படி உயர்வுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிகள் ஆகும்.


வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இந்த அகவிலைப்படி உயர்வானது, மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.   


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! டிஏ உயர்வு... இதோ அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ