7th Pay Commission: மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய ரயில்வே மற்றும் பிற மத்திய நிறுவனங்களின் (CPSEs) ஊழியர்களுக்கு பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த துறைகளிலிருந்து ஜனவரி 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் ஓய்வு பெற்ற CG ஊழியர்களுக்கு  மோடி அரசாங்கம் ஒரு பெரிய நன்மையை வழங்கியுள்ளது. இந்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூனியர் முதல் மூத்த நிலை வரையிலான பணியாளர்கள், ஓய்வூதிய நிதியில் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பயனடைவார்கள். இந்த பலன் கிராச்சுட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட்டில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Pay Commission VII மற்றும் HRMS Indian Railways-ன் துணை இயக்குனர் ஜெய் குமார் கருத்துப்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படியின் (Dearness Allowance) நன்மை கிடைத்துவிட்டது. இப்போது மீதமுள்ள துறைகளின் பணியாளர்களுக்கு அதன் பலன் அளிக்கப்படுகிறது. ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்கள் இதன் வரம்புக்குள் வருவார்கள்.


40 ஆயிரம் அடிப்படை சம்பளத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பலன்


கணக்கீட்டின் அடிப்படையில், ஓய்வுபெறும் போது ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 40 ஆயிரம் ரூபாயாக இருந்தால், உயர்த்தப்பட்ட 11 சதவீத அகவிலைப்படியில் அதிக பலன் கிடைக்கும். கிராச்சுட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட் தொகை சுமார் ரூ.1,17,000 அதிகரிக்கும். ரூ.2,50,000 அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய நிதியில் ரூ.7 லட்சத்துக்கு மேல் பலன் கிடைக்கும்.


ALSO READ: 7th Pay Commission: அரசு கொடுத்த தீபாவளி பரிசால் அசுர வேகத்தில் ஊதியத்தில் ஏற்றம்


மூன்று வகைகளில் பலன் கிடைக்கும்


ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2020 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு (Central Government Employees) 21 சதவீத டிஏ விகிதத்தில் கிராஜுவிட்டி (Gratuity) மற்றும் விடுப்பு என்காஷ்மென்ட் கிடைக்கும். அதே நேரத்தில், 1 ஜூலை 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 24% மற்றும் 2021 ஜனவரி 1 முதல் ஜூன் 30, 2021 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 28% என இந்த தொகை வழங்கப்படும்.


யாருக்கு அதிக பலன் கிடைக்கும்


ஜனவரி 1, 2021 முதல் ஜூன் 30, 2021 வரை ஓய்வு பெற்ற பணியாளர்கள் மிகப்பெரிய பலனைப் பெறுவார்கள். அவர்களது ஓய்வூதிய நிதி 28 சதவீத அகவிலைப்படியாக கணக்கிடப்படும். ஜூலை-டிசம்பர் 2020 க்கு இடையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 24 சதவீத அகவிலைப்படியில் கணக்கிடப்படும். ஜனவரி-ஜூன் 2020 இல் ஓய்வு பெறுபவர்களுக்கு 21 சதவீத அகவிலைப்படியில் கணக்கிடப்படும்.


எவ்வளவு லாபம் கிடைக்கும்


ஜனவரி 1, 2020 முதல் 30 ஜூன் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான கணக்கீடு இந்த வகையில் இருக்கும்.


அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 40,000
ஒன்றரை வருடத்தில் 11% டிஏ உயர்வு = மாதம் ரூ 4,400
அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி = மாதம் ரூ 44,400
கிராஜுவிட்டி + லீவ் என்காஷ்மென்ட்டில் உள்ள பலன் = சுமார் ரூ.1,16,600


ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR