7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம்

மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு, தீபாவளிக்கு முன்னதாக மூன்று விதமான பரிசுகளைப் பெறப் போகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2021, 01:04 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.
  • ஊழியர்களின் அகவிலைப்படியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்படக்கூடும்.
  • 3% அதிகரித்த பிறகு, மொத்த அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும்.
7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம் title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! இந்த ஆண்டு, ஊழியர்கள் தீபாவளிக்கு முன்னதாக மூன்று விதமான பரிசுகளைப் பெறப் போகிறார்கள்.

முதலாவதாக, ஊழியர்களின் அகவிலைப்படியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்படக்கூடும். மறுபுறம், இரண்டாவது பரிசாக, ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து அரசாங்கத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்றாவதாக, தீபாவளிக்கு முன் பிஎஃப் மீதான வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கக்கூடும்

ஜூலை 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்னும், AICPI தரவு ஜனவரி முதல் மே 2021 வரை அகவிலைப்படி 3% வரை அதிகரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இந்த வழியில் டிஏ 3% அதிகரித்த பிறகு, மொத்த அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஊடக அறிக்கையின்படி, தீபாவளியில் மத்திய அரசு டிஏவை அதிகரிப்பதாக அறிவிக்கக்கூடும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை, அகவிலைப்படி 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜூலை 2021 முதல் அரசாங்கம் (Central Government) அதை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது 2021 ஜூன் மாதத்தில் அகவிலைப்படி மேலும் 3 சதவிகிதம் அதிகரித்தால், அது  (17+4+3+4+3) 31 சதவீதத்தை எட்டும். அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .50,000 என்றால், அவருக்கு ரூ .15,500 டிஏ கிடைக்கும்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி

அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்குமா?

ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையின் போது, 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி அரியர் தொகையைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகின்றது. இப்போது நிலுவையில் உள்ள 18 மாத அரியர் தொகை விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியை எட்டியுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, பிரதமர் மோடி இதற்கு விரைவில் ஒரு தீர்வைக் காணக்கூடும். அதன் பிறகு ஊழியர்கள் தீபாவளிக்குள் நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி அரியரைப் பெறலாம். கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய் காரணமாக நிதி அமைச்சகம் மே 2020 இல், டிஏ உயர்வை 2021 ஜூன் 30 வரை நிறுத்தியது.

பிஎஃப் வட்டி பணம் வரும்

இந்த தீபாவளியில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருக்கும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் நல்ல செய்தியைப் பெறக்கூடும். தீபாவளிக்கு முன், EPFO, ​​கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பம்பர் பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் EPFO, வட்டி பணத்தை விரைவில் வரவு வைக்கும். அதாவது, 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான வட்டியை செலுத்தப்போவதாக EPFO ​​விரைவில் அறிவிக்கக்கூடும்.

ALSO READ: 7th Pay Commission: பம்பர் ஊதிய உயர்வு, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News