7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி

2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படியை 28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வரவிருக்கும் உயர்வால், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 31% என்ற விகிதத்தில் வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 07:53 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் ஒரு அகவிலைப்படி அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
  • லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் 2021 க்குள் அதிகரித்த அகவிலைப்படியை பெறுவார்கள்
  • வரும் மாதங்களில் நிலுவைத் தொகையை அரசு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி title=

7th Pay Commission latest Update: 7 ஆவது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் ஒரு அகவிலைப்படி அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது ஊழியர்களின் தற்போதைய பண்டிகைக் காலத்தின் கொண்டாட்டத்தை அதிகரிக்கும். சமீபத்திய திருத்தத்தின் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மேலும் 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படியை 28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வரவிருக்கும் உயர்வால், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 31% என்ற விகிதத்தில் வழங்கப்படும்.

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் 2021 க்குள் அதிகரித்த அகவிலைப்படியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பணவீக்கத்திலிருந்து தேவையான நிவாரணத்தை வழங்கும் அகவிலைப்படி எப்போது அதிகரிக்கப்படும் என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஜூலை 2021 முதல் 28% டிஏ உயர்வு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், பல ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 2021 முதல்தான் அதிகரித்த சம்பளம் வரவு வைக்கப்படத் தொடங்கியதாக புகார் கூறுகின்றனர். இப்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்தை கோருகின்றனர்.

ALSO READ: 7th Pay Commission: பம்பர் ஊதிய உயர்வு, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ

வரும் மாதங்களில் நிலுவைத் தொகையை அரசு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுடன் நிலுவைத் தொகையும் வந்தால், இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சிறப்பு பண்டிகை பம்பர் பரிசாக அமையும்.

அகவிலைப்படி கணக்கீடு

31.18% என்ற விகிதத்தில் அரசு (Central Government) ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் அகவுலைப்படி வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரவுண்டு எண்களாக, அதிகரிப்பு சுமார் 31% ஆக இருக்கும்.

அகவிலைப்படி உயர்வை எவ்வாறு கணக்கிடுவது என இங்கே காணலாம்:

1. அடிப்படை சம்பளம் அல்லது ஓய்வூதியம்: ரூ .18,000
2. 31% விகிதத்தில் புதிய அகவிலைப்படி: ரூ .5580/மாதம்
3. 17% விகிதத்தில் அகவிலைப்படி: ரூ .3060/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு: 5580-3060 = ரூ. 2520/மாதம்
5. ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு: 2520X12 = ரூ. 30,240.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News