வாழ்க்கைக்கு நீர் மிகவும் அத்தியாவசியமானது. தண்ணீர் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம், ஆனால், தண்ணீர் ஒவ்வாமையினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு 12 வயது மட்டுமே, தண்ணீர் அலர்ஜி ஏற்பட்டதன் காரணமாக, இந்த பெண் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுமியின் பெயர் டேனியல் மெக்ரெவன். இவர் அமெரிக்காவைச் (America) சேர்ந்தவர். டேனியலின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு வியர்த்தால் கூட, பல வகையான பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.


டேனியல் என்ற சிறுமி அக்வாஜெனிக் உர்டிகேரியா (Aquagenic Urticaria) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான நோய். உலகளவில் 100 க்கும் குறைவான மக்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.



டேனியல் தண்ணீருடன் (Water) தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அந்த பகுதியில் அரிப்பும் புண்ணும் வலியும் ஏற்படுகிறது. டேனியல் நீச்சலை மிகவும் விரும்பினார். ஆனால் அவர் இதனால் தனது பிரச்சினை அதிகரிப்பதை பற்றி அறிந்ததும், அவர் நீச்சலை நிறுத்த வேண்டியிருந்தது.


கோடையில் டேனியல் வீட்டிற்குள் இருக்க வேண்டும். கோடையில், வீட்டை விட்டு வெளியேறுவதன் காரணமாக அவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். டேனியலுக்கு வியர்வையால் (Sweat)  அரிப்பு ஏற்படுகிறது.


நீர் ஒவ்வாமை காரணமாக டேனியல்ஸ் ஒரு அனாபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  ஒவ்வாமை மிக அதிகமாக இருக்கும்போது அந்த சூழ்நிலைகளில்  இந்த ஷாக் ஏற்படலாம். இந்த அதிர்ச்சியால் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒரு வாளி தண்ணீரில் குளிப்பதும் டேனியலைக் கொல்லக்கூடும் என்கின்றனர்.


டேனியல் தண்ணீர் அலர்ஜி இருந்தாலும், தண்ணீரை உட்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த ஒவ்வாமை பற்றி டேனியலுக்கு 11 வயதாக இருந்தபோது தெரிந்தது.


ALSO READ | பாகிஸ்தானில்  கண்டுபிடிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR