மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை.  அப்படியே அதிகரித்தாலும், பணம் வீட்டில்  தங்காமல் போய் விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தட்டுப்பாடு, பண இழப்பு, பண விரயம் போன்ற பிரச்சனைகள் பொதுவாக பலர் சந்திக்கும் பிரச்சனைகள் தான். பலர் தங்கள் வாழ்க்கையில் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பணத்தை சரியாக கையாள முடியாதது தவிர, சில ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள், கெட்ட பழக்கங்கள் போன்றவை பணப் பற்றாக்குறைக்கு காரணமாகின்றன. 


ஜோதிடத்தில் கூறப்பட்ட சில பரிகாரங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்கும், சம்பாதித்த பணம் வீட்டில் தங்குவதற்கும், பண விரயம் ஆவதை  தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஜோதிட பரிகாரங்கள் வருமானத்தை அதிகரிப்பதோடு, தேவையற்ற செலவுகளிலிருந்து உங்களை காத்து, பண விரயத்தை  தடுக்கின்றன.


மேலும் படிக்க | புத-ஆதித்ய யோகம் 2022: இந்த 3 ராசிகளுக்கு ஜூன் 3 வரை ராஜ யோகம் தான்


பண பற்றாக்குறையை தீர்க்கும் பரிகாரங்கள்சில பரிகாரங்கள் பணப் பற்றாக்குறையிலிருந்து உங்களைக் காப்பாற்றும். பண இழப்பைத் தடுக்கும், அத்துடன் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.


எவ்வளவோ முயற்சி செய்தும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை என்றால், குடும்ப தலைவன் தினமும் சந்தன திலகம் பூசி, வீட்டின் சமையலறையிலேயே உணவு உண்ண வேண்டும். இது பண வரவுக்கான புதிய வழிகளை உருவாக்கும்.


செல்வத்தைப் பெற, செல்வத்தின் அதிதேவதையான லட்சுமி தேவியின் அருள் அவசியம். இதற்கு அமாவாசை அன்று இரவு வீட்டின் வடகிழக்கில் பசு நெய் தீபம் ஏற்றவும். மேலும், பருத்தி திரிக்கு பதிலாக, சிவப்பு பருத்தி நூலை பயன்படுத்தவும். மேலும் தீபம் ஏற்றும் போது குங்குமப்பூ இழைகளை நெய்யில் போடவும். இப்படி விளக்கேற்றினால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை


செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மிக்கு வலம்புரிச் சங்கு மிகவும் பிடித்தமானது. வலம்புரிச் சங்கு என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், செல்வ வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இது லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது.


வீட்டில் தேவையில்லாமல் செலவுகள் அதிகரித்து, கட்டுப்படுத்த முடியாமல் போனால், வியாழன் அன்று வலம்புரி சங்குகளில் பால் நிரப்பி விஷ்ணு பகவானுக்கு அபிஷேகம் செய்யவும். இதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பணம் வீட்டில் தங்கும். மேலும், பணம் வரவுக்கான புதிய வழிகள் ஏற்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR