7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு வலுவான அறிவிப்பை வெளியிட உள்ளது. இது குறித்த விவாதம் வேகமாக நடந்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக சில கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இவற்றில் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அடங்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்த வரை, ஊழியர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத வகையில், தேசிய ஓய்வூதியத்தில் தேவைப்படும் திருத்தங்களை செய்ய மத்திய அரசி ஒரு குழுவை நியமித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18 மாத அகவிலைப்படி அரியர் தொகை


அடுத்ததாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை கிடைக்கும் என்றும், இதனால் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.


அகவிலைப்படி அதிகரிப்பு


இது தவிர, அகவிலைப்படியிலும் ஜூலை மாதம் நல்ல அதிகரிப்பு இருக்கும் என அரசாங்கம் அறிவிக்கக்கூடும். இவை இரண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். அரசாங்கம் இந்த பெரிய அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், இது குறித்த பல ஊடக அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அகவிலைப்படி அதிகரிப்புக்கு பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 16% டிஏ ஹைக்.. அரியரும் கிடைக்கும், உத்தரவு வெளியானது!!


ஊழியர்களின் கணக்கில் இவ்வளவு பணம் வரும்


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 18 மாத டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படக்கூடும். எனினும் இது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், எப்போது வேண்டுமானாலும் இது அறிவிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த ஆண்டு ஊழியர்களை பொறுத்தவரை மிக நல்ல ஆண்டாக இருக்கும். இதன்படி, முதல் நிலை ஊழியர்களின் கணக்கில் சுமார் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் தொகை வரும். அதற்கான விவாதம் வேகமாகமும் மும்முரமாகவும் நடந்து வருகிறது.


பணவீக்கம் அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் இந்த ஏற்றங்கள் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரசாங்கம் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திம் அகவிலைப்படியை முடக்கியது. நிலைமை சரியானவுடன் அகவிலைப்படி மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், அகவிலைப்படி முடக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதை வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


டிஏ உயர்வு இருக்கும்


மோடி அரசு மீண்டும் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. இம்முறையும் அகவிலைப்படி 4 சசதவிகிதம் உயர்வது சாத்தியமென்றும், இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். அதிகரிக்கப்படும் அகவிலைப்படி விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும்.


8வது ஊதியக் குழு: 


ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | DA Hike: மோசமான சூழலிலும் அகவிலைப்படியை உயர்த்திய அரசு... கொண்டாட்டத்தில் மின் ஊழியர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ