7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: நீங்கள் ஒரு மத்திய ஊழியரா அல்லது உங்கள் குடும்பத்தில் மத்திய அரசு ஊழியர் எவரேனும் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. ஆம், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது. அடுத்த 15 நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த 15 நாட்களில் அரசாங்கம் அகவிலைப்படி/அகவிலைப்படி நிவாரணம் (DA/DR) அதிகரிப்பை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால், தசரா பண்டிகைக்கு முன்னதாக நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24க்குள் அறிவிப்பு வெளியாகும்:
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக உயர்த்தப்பட்ட தொகை, மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு  அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த முறை தசரா பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படயுள்ள நிலையில், அக்டோபர் 24-ம் தேதிக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அதிமட்டுமின்றி இம்முறை DA 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய பணியாளர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 3 சதவீதம் உயர்வுக்கு பிறகு இது 45 சதவீதமாக அதிகரிக்கலாம். ஆனால், மத்திய ஊழியர்கள் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உங்கள் FASTagல் எவ்வளவு பணம் மீதம் உள்ளது? தெரிந்துகொள்ள எளிய வழிகள்!


47 லட்சம் மத்திய ஊழியர்கள் பயனடைவார்கள்
இந்த முறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதாவது, ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதிய உயர்வு மற்றும் மூன்று மாத டி.ஏ., அரசிடம் இருந்து வழங்கப்படும். அதாவது, சம்பளத்துடன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிஏ பாக்கியும் வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் 47 லட்சம் மத்திய ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு பணவீக்கத்தில் இருந்து மத்திய ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களின் DA ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. இது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு நிலையான நடைமுறையாகும். எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும்(டிஏ), ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் டிஏ நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆண்டின் 2வது முறைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் தான் 7வது சம்பள கமிஷனின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி என்பது உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


மேலும் படிக்க | டபுள் ஜாக்பாட்.. உயர்கிறது அகவிலைப்படி, ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ