டெல்லியில் இருந்து புதிய ரயில் அறிவித்த இந்திய ரயில்வே: பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை சார்பில் பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்றொரு புதிய ரயிலை இயக்க ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயிலை இயக்க ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயின் புதிய ரயில் டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து இயக்கப்பட்டு கோட்வார் வரை செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயிலின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த தகவல்கள் ரயில்வே தரப்பில் இருந்து பெறப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ​​ரயில் எண் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த நகரங்களுக்கு ரயில் செல்லும்?
இந்த ரயில் (Indian Railways) மீரட், முசாபர்நகர், தேவ்வந்த், தப்ரி, ரூர்க்கி, நஜிபாபாத் வழியாக கோட்வாரை சென்றடையும். இது தவிர, மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள நஜிபாபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணிகளுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.


மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?


புதிய ரயிலின் நேரம் என்னவாக இருக்கும்?
>> ரயிலின் (IRCTC) நேர அட்டவணைக்கு ரயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து இரவு 21.45 மணிக்கு புறப்படும்.
>> இதற்குப் பிறகு, ரயில் மறுநாள் அதிகாலை 03.50 மணிக்கு கோட்வாரை வந்தடையும்.
>> திரும்புவது பற்றி பேசுகையில், இந்த ரயில் கோட்வாரில் இருந்து மதியம் 22.00 மணிக்கு புறப்படும்.
>>மீண்டும் மறுநாள் அதிகாலை 04.35 மணிக்கு ஆனந்த் விஹார் டெர்மினலை அடையும்.


ரயில் எண் வெளியிடப்படவில்லை:
இதனிடையே இந்த ரயிலின் எண்ணையும் ரயில்வே இன்னும் வெளியிடவில்லை. தற்போது இந்த ரயில் குறித்த மொத்த தகவல்களும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் இந்த ரயில் தினமும் இயக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.


இந்த ரயில் எங்கெங்கே நிற்கும்?
இருப்பினும் இந்த ரயியில் ஸ்டாப்பிங்ஸ் பற்றிய தகவலை ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ரயில் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து புறப்பட்டு மீரட் நகரை அடைந்து 2 நிமிடம் நிறுத்தப்படும். அதன் பிறகு, இந்த ரயில் முசாபர் நகர் செல்லும், அதன் பிறகு இந்த ரயில் தியோபந்தில் நிற்கும். இது தவிர, இந்த ரயில் நள்ளிரவில் டாப்ரியை அடைந்து அங்கிருந்து ரூர்க்கியில் நிற்கும். இதற்குப் பிறகு, இந்த ரயில் முவாசம்பூர் நாராயண், நஜிபாபாத், சானே சாலை மற்றும் கோட்வார் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.


ரயில் இயக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை:
இதற்கிடையில், இந்த ரயிலை இயக்குவது குறித்து இதுவரை ரயில்வே துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. மேலும் இந்த ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை. எனினும் இந்த ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என வடக்கு ரயில்வே ஜிஎம் இயக்குனருக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் தொடக்க ஓட்டத்தை சிறப்பு சேவையாக இயக்கலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் டூர் செல்ல செம சான்ஸ்.. IRCTC அசத்தல் பேக்கேஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ