Blood Sugar Control Tips:இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல ஒரு கோளாறு தான். எனினும், அதனை கட்டுகுள் வைத்திருக்காவிட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு, இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சோம்பில்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சத்துக்கள் உள்ளன. சோம்பில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், அதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு நிலை. தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக இது ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும். கருஞ்சீரகம் சர்க்கரை நோயாளிகளின் சுகர் லெவலை கட்டுக்குள் (Blood Sugar Control Tips) வைத்திருக்கும் ஒரு தீர்வாகும் என்கின்றனர் நிபுணர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இங்கே கூறுவோம்.


சர்க்கரை நோயாளிகள் இந்த மஞ்சள் விதைகளை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் போகாது.


மேலும் படிக்க  |  ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரலில் கொழுப்பு படிந்துள்ளதாக அர்த்தம்


சர்க்கரை நோயாளிகள் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது


சர்க்கரை நோயாளியாக இருந்தால் கருஞ்சீரகம் சாப்பிடலாம். நஏனெனில் இதில் உள்ள தனிமங்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. எனவே சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சோம்பு சாப்பிட வேண்டும்.


வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது


சோம்பில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதாடு டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது.


சர்க்கரை நோய் தீர சோம்பை சாப்பிடும் முறை


நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சோம்பை மென்று சாப்பிடலாம். இது தவிர சோம்பை தண்ணீருடன் சேர்த்தும் பருகலாம். சோம்பை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை குடித்தால், அது உசுகர் லெவலை கட்டிப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சோம்பு தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு கலந்து, இந்த நீரை சூடாக்கி, பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி, குடிக்கவும்.


சோம்பின் பிற நன்மைகள்


1. சோம்பு, நார்ச்சத்து கொண்டது. எனவே, உணவிற்கு பின் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் நீங்கும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாகும். மேலும், வாயு, அஜீரணம், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் சீராகும்


2. வாய் துர்நாற்றத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் சோம்பு சாப்பிடலாம். அதுவும் உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகம் உட்கொள்வது வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு தீர்வைத் தரும்.


3.  சோம்பு என்னும் சக்தி வாய்ந்த மசாலாவை நேத்திர ஜோதி என ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர்.. எனவே கண் பார்வை கூர்மையாகவும் கண் நோய் வராமல் தடுக்கவும், சோம்பு உதவும். 


மேலும் படிக்க  |  சுகர் லெவல் முதல் வெயில் லாஸ் வர ... பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ