7வது ஊதியக் குழு, சமீபத்திய செய்திகள்: பல மாநிலங்கள் தங்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை சமீப காலங்களில் உயர்த்தியுள்ளன. இதனையடுத்து, மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல, ஊழியர்களுக்கு ஜூன் மாத இறுதியில் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 2023 -க்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிடப்பட்ட பிறகு டிஏ உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டிற்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மே மாதத்தில் 134.7 புள்ளிகளாக இருந்த குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகள் வரை சென்றுள்ளது. ஜூன் 2023 இல் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஐசிபிஐ இன்டெக்ஸ் பொதுவாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வின் சதவீதத்தை நிர்ணயிக்கிறது.


மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்துகிறது


ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களுக்கான அகவிலைபப்டி உயர்த்தப்படுகிறது என்பதை அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டும். கடைசியாக அகவிலைப்படி உயர்வு மார்ச் 2023 இல் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. கடந்த உயர்வில், டிஏ 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது.


அடுத்த டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?


சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அடுத்த அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படும்.


அகவிலைப்படி (டிஏ) அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி உயர்வால் பயனடைவார்கள்.


டிஏ 46 சதவீதமாக அதிகரிக்கலாம்


ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய தரவுகளின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்று ஜீ நியூஸ் அறிக்கை கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு செப்டம்பரில் மத்திய அரசால் வெளியிடப்படும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கும் சம்பளம்


டிஏ உயர்வு மார்ச் 2023 இல் அறிவிக்கப்பட்டது


01.01.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் மார்ச் 2023 இல் மத்திய அரசு உயர்த்தியது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட, அகவிலைப்படியானது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் அப்போதைய 38 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர்.


அரசு ஊழியர்களுக்கான டிஏவை மாநிலங்கள் உயர்த்துகின்றன


சமீபத்தில், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு டிஏவை உயர்த்தின. மத்தியப் பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதற்கு முன், ஒடிசா அரசும் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல், கர்நாடக அரசும் ஜனவரி 1, 2023 முதல் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி! 50000 வரை சம்பளத்தில் உயர்வு நிச்சயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ