7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, உங்கள் குடும்பத்தில் வேறு யாராவது மத்திய அரசு ஊழியராக அல்லது ஓய்வூதியம் பெறுபவராக இருந்தாலோ, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் மனதை கவரும் வகையில் இரண்டு நற்செய்திகளை அளிக்கவுள்ளது. இவற்றின் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். அனைவரின் மனதையும் கவரும் வகையில், ஊழியர்களின் டிஏ அதிகரிப்புடன் ஃபிட்மென்ட் தொகையையும் அரசு விரைவில் உயர்த்த உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி அதிகரிப்பு:


அரசாங்கம் ஊழியர்களின் ஊதியத்தை 4 சதவிகிதம் அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடி ஊழியர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இதை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.


டிஏ -வில் அதிகப்படியான அதிகரிப்பு இருக்கும்


மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை சுமார் 4 சதவீதம் உயர்த்தக்கூடும் என்று கருதப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். இதற்குப் பிறகு சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீத டிஏ கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஊழியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது, இந்த தேதியில் அகவிலைப்படி உயர்வு


7வது ஊதியக் குழுவின் படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. இதன் விகிதங்கள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் செயல்படுத்தப்படும். ஜனவரி 2023- க்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% ஆக இருந்தது. அதற்கு முன் 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி ஜனவரிக்கு பின்னர் 46 சதவிகிதமாக அதிகரித்தது. இப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், அதன் விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். முன்னதாக, மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட டிஏ விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. அகவிலைப்படி அதிகரிப்பு ஊழியர்களுக்கு, தினம் தினம் அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க ஒரு வரப்பிரசாதமாய் அமைகிறது. 


ஏஐசிபிஐ குறியீட்டில் உயர்வு


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 புள்ளிகளாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 0.1 புள்ளிகள் குறைந்து 132.7 புள்ளிகள் ஆனது. மீண்டும் மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை 0.6 புள்ளிகள் அதிகரித்து 133.3 புள்ளிகளை எட்டியது. அதேசமயம் ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் அதிகரித்து தற்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. எனினும், தற்போதுள்ள போக்கைப் போல, இந்த இரண்டு மாதங்களின் ஏஐசிபிஐ எண்களிலும் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். 


ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் பெரிய அப்டேட் 


மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த முக்கிய அப்டேட் வரவிருக்கிறது. இதுவும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்கிலிருந்து 3 மடங்காக உயர்த்தி அரசு அறிவிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி செய்யப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டால், இன்னும் சில நாட்களில் ஊழியர்களுக்கு இரண்டு பெரிய பரிசுகள் கிடைக்கும். 


மேலும் படிக்க | ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்திய அரசு! எவ்வளவு சம்பளம் உயரும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ