சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க நாம் பல வகையான ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துகிறோம். இதில் சில ஃபேஸ் பேக்குகள் தழும்புகளை நீக்குகின்றன, சில ஃபேஸ் பேக்குகள் ஸ்கின் டேனிங்கை நீக்க உதவுகின்றன, சிலவற்றைப் பயன்படுத்தும்போது பருக்கள் நீங்குகிறது மற்றும் சில ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள வறட்சி அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உடகவுகிறது. ஆனால், சந்தையில் விற்பனை செய்யப்படும் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதாக தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம், இதன் மூலம் நீங்கள் எந்த பக்கவிளைவும் இல்லாமல் சிறந்த பலனைப் பெறலாம். ஏனெனில் வீட்டில் தயாரித்து பயன்படுத்தப்படும் ஃபேஸ் பேக் மலிவான விலையுடன், இந்த பேக்குகள் சருமத்திற்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த பேக்குகள் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பளபளப்பான சருமத்திற்கான ஃபேஸ் பேக்குகள் | Face Packs For Glowing Skin :


கற்றாழை மற்றும் தேன்:
கற்றாழை சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. கற்றாழையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, சரும எரிச்சல் மற்றும் சரும வறட்சி போன்றவற்றை போக்க உதவும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க, முதலில் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்தக் கொள்ளவும், பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் இரண்டு டீஸ்பூன் தேன் ஒன்றாக சேர்த்து கலக்கவும். இந்த பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும், சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.


மேலும் படிக்க | உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!


மஞ்சள் மற்றும் பால்:
இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் முகத்தில் துளைகள் ஏற்படுவதை தடுத்து முகப்பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.. இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க அரை தேக்கரண்டி மஞ்சளை 4 தேக்கரண்டி பாலுடன் நன்றாக பேஸ்ட் வடிவில் கலந்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 


பாலாடை மற்றும் குங்குமப்பூ:
இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க முதலில், ஒரு ஸ்பூன் குங்குமப்பூ மற்றும் ஒரு ஸ்பூன் பாலாடை இரண்டை ஒன்றாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து பேஸ்ட் வடிவில் கலக்கவும். இந்த ஃபேஸ் பேக் இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் டேனிங் நீங்கி சருமம் பொலிவு பெரும். 


தக்காளி மற்றும் தயிர்:
தயிரில் உள்ள பண்புகள் சருமத்தை இரவோடு இரவாக பளபளப்பாக மாற்ற உதவும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு ஸ்பூன் தயிரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றை சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ