கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.


இந்த வார துவக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை, இன்று மிக அதிகமாக உயர்ந்துள்ளது. 


சமீபத்திய நிலவரப்படி, ரஷ்யா உக்ரைன் போரின் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ. 1240 உயர்ந்து, ரூ.38,992 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.155 அதிகரித்து ரூ.4,874-க்கு விற்கப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.2.7 அதிகரித்து ரூ.71.40-க்கு விற்பனையில் உள்ளது. 


இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 4827-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ரூ.4719 என்ற நிலையில் முடிந்த தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 108 அதிகரித்தது. 


மேலும் படிக்க | Ration Card: ரேஷன் வாங்கும் முறையில் பெரிய மாற்றம், புதிய விதிகளின் விவரம் இதோ


ஒரு சவரண் ஆபரணத் தங்கம் ரூ. 864 அதிகரித்து இன்று காலை ரூ.38,616-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரண் ஆபரணத் தங்கம் நேற்று மாலை ரூ. 37,752-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இன்று காலை நிலவரப்படி, வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்றைய விலையான ரூ. 68.70-லிருந்து ரூ.1.90 அதிகரித்த ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ. 70.60-க்கு விற்பனையானது. 


இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.


இதற்கிடையில் தங்கத்தின் ஏறுமுகம் தொடரும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால், உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை உள்ளது. இந்த பதட்டத்தின் முக்கிய தாக்கம் தங்கத்தில் இருக்கக்கூடும். இன்று ரஷ்யா உக்ரைன் மீது முழுமையான தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில், இது போருக்கான துவக்கமாக பார்க்கப்படுகின்றது. 


போர் சூழலில், அமெரிக்க ஃபெடரல் வங்கிகள் மற்றும் டாலரின் நிலையை பெரிதும் சார்ந்துள்ள தங்க விலையில் திடீர் ஏற்றம் வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.


மேலும் படிக்க | உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்: இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR