Traffic Challans Cancelled: யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு 2017ஆம் ஆண்டில் இருந்து 2021ஆண்டு வரையில் அதன் இடையிலான போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. யோகி அரசாங்கம் மாநிலத்தின் தனியார் மற்றும் வணிக வாகன உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தில் நீண்ட நாட்களாக அபராதம் செலுத்தாத உரிமையாளர்களுக்கு சலுகை அளித்து, உத்தர பிரதேச வாகன உரிமையாளர்களின் அபராத சலானை யோகி அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் யோகியின் இந்த முடிவால், லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.


பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உத்தரபிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான அபராதம் சலான்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த சலான்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வாகனங்கள் முதல், இது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.


மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?


நீதிமன்றத்தில் உள்ள துணைக் குழு வழக்குகளின் பட்டியலைப் பெற்ற பிறகு, இந்த சலான்களை போர்ட்டலில் இருந்து நீக்குமாறு போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் அனைத்து பிரிவு போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கை, மற்ற மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.


இது தொடர்பான அறிவுரைகள் அனைத்து கோட்ட போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலான்களின் பட்டியலைப் பெற்ற பிறகு, அதை இ-சலான் போர்ட்டலில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவின்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுகின்றன.


உத்திர பிரதேச அரசாணை எண். 2023-ன் மூலம் பழைய நிலுவையில் உள்ள சலான்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார். இவ்வாறு சலான் ரத்து செய்யக் கோரி நொய்டாவில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உத்தரபிரதேசம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பணப்பட்டுவாடாவை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


பீதியடைய தேவையில்லை


அதே நேரத்தில், இந்த காலகட்டத்திற்குப் பிறகு ஓட்டுநர்கள் பீதியடைய தேவையில்லை. வீட்டிலிருந்த படியே ஆன்லைன் டிராஃபிக் சலானை செலுத்தலாம். உத்தர பிரதேச போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் முழுமையான தகவலை நீங்கள் சேகரிக்கலாம். இதற்கு வாகன எண் மட்டும் தெரிந்திருக்க வேண்டும். ஆன்லைனிலேயே தவறான சலான் குறித்தும் புகார் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. இருப்பினும், வாகனத்தின் சலான் கழிக்கப்படும்போது மொபைல் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படுகிறது.


மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ