குரு உதயம் 2022: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் இணையும்போதோ, அது அனைத்து ராசிக்காரர்களையும் நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும், சில ராசிக்காரர்களின் வேலையில் தடைகளையும் ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் மாறுவதோ அல்லது உதயமாவதோ, நேரடியாக மனித வாழ்க்கையை பாதிக்கிறது. 


மார்ச் 23ஆம் தேதி தேவகுரு வியாழன் உதயமாக உள்ளார். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது கிரகங்கள் அஸ்தமிக்கின்றன. பின்னர் அவை தங்கள் இயக்கத்தால் தூரமாகச் செல்கின்றன. அதாவது சூரியனை விட்டு தூரமாக செல்கின்றன. அப்போது அவை உதயமாகின்றன. சூரியனை விட்டு நகர்ந்தால் அது உதயமாகும் என்று பொருள். எனவே, குரு பகவானின் உதயத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய லாபங்களை கொடுக்கும். இவர்கள் வணிகம் மற்றும் தொழிலில் பல வளங்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


தேவகுரு வியாழன் மேஷத்தின் பதினொன்றாவது ஸ்தானத்திற்கு வருவார். இந்த இடம் செல்வ ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது மேஷ ராசிக்காரர்கள் வியாழனின் உதயத்தால் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் அவர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். இட மாற்றமும் ஏற்படும். இந்தக் காலத்தில் செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் காணலாம். 


மேலும் படிக்க | என்றென்றும் செல்வ செழிப்புடன் திகழ செய்ய வேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்..!! 


ரிஷபம்


குரு பகவான் ரிஷப ராசியின் பத்தாம் வீட்டில் உதயமாகிறார். இந்த இடம் தொழில் மற்றும் வேலைக்கான இடமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். வணிகத்திலும் சிறப்பாக செயல்பட்டு அதிக லாபம் காண்பார்கள். குருவின் உதயம் அவர்களுக்கு நல்ல லாபத்தை தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்புள்ளது. இது தவிர, சிறந்த வேலை வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். 


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கும் வியாழனின் உதயம் நன்மை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் ஏழாம் வீட்டில் உதயமாகும். இதன் அடிப்படையில், வியாழனின் உதயத்தால் உங்கள் திருமண வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் அவர்களுக்கு அனைவரிடமிருந்தும் முழு ஆதரவு கிடைக்கும். 


மேலும், இந்த காலகட்டம் உங்களுக்கு அனைத்து வகையிலும் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் செய்யும் அனைத்து பணிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். ம். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அது திருப்பித் தரப்படும். நிதி நிலை மேம்படும். வேலை தொடர்பான நேர்காணல் போன்றவற்றிலும் இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள். 


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு, குரு பகவான் அவர்களது இரண்டாவது வீட்டில் அதாவது பேச்சு ஸ்தானத்தில் உதயமாகிறார். எனவே, இந்த காலகட்டத்தில், மகர ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இந்த ஒப்பந்தத்தின் பலனை எதிர்காலத்தில் நீங்கள் பெறலாம். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், வியாழன் கிரகத்தின் உதயத்தின் போது அது உங்களிடம் திரும்பி வரும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம்.


மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR