சினிமாக்களில் ஆரம்பித்து சீரியல்கள் வரை மாமியார்-மருமகள் என்றாலே சண்டை-சச்சரவுதான் என்று காண்பிக்கின்றனர். இதனாலேயோ என்னவோ பல மருமகள்களுக்கும் மாமியார்களுக்கும் ஒத்து பாேவதில்லை. ஒரே வீட்டில் இருந்தால் சண்டை வருகிறது என்பதால் பலர் இப்போது தனிதனியே பிரிந்து தனி குடும்பமாக வாழ்கின்றனர். இதனால், மாமியார்-மருமகள்கள் எப்போதாவது சந்தித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் வெளியில் காட்டப்படாத நெருக்கு எரிந்து கொண்டே இருக்கும். இதையெல்லாம் கடந்து, ஒரு சிலர் தங்களது மாமியாருடன் நல்ல உறவையே வளர்த்து கொண்டு வருகின்றனர். உங்கள் மாமியாரிடம் நீங்களும் நல்ல பெயர் எடுக்க, அவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக்கொள்ள ‘இந்த’ டிப்ஸ்களை பின்பற்றுங்கள் போதும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.ஒன்றாக சமைத்தல்:


சமயலறையை, பலர் வீட்டின் இதயம் என்று குறிப்பிடுவதுண்டு. நீங்கள் ஒன்றாக யாருடன் சமைத்தாலும் சரி, அவர்களுடனான உங்களது உறவு பன்மடங்காக உயரும். மாமியாருடன் மட்டுமல்ல, கணவன்-மனைவி ஒன்றாக சேர்ந்து சமைத்தாலும் சரி, அவர்களுக்குள் இருக்கும் இணைப்பும் பிணைப்பும் இன்னும் அதிகரிக்கும். இப்படி நீங்கள் உங்களது மாமியாருடன் இணைந்து சமைக்கையில் பல நல்ல தருணங்கள் உருவாகும். மனம் விட்டு பேசுவதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. சமையல் தெரியாத மருமகளாக இருந்தால், சமைக்கவும் கற்றுக்கொள்ளலாம். 


2.சிறு வயது புகைப்படங்கள்:


உங்கள் கணவர் மற்றும் அவர் சார்ந்த உறவுகளின் சிறு வயது புகைப்படங்கள் இருந்தால் அவற்றை அவர்களின் அனுமதியுடன் பார்க்கலாம். உங்கள் மாமியாருடன் இவற்றை பார்ப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இதனால் உண்மையாகவே நீங்கள் பல நெகிழ்ச்சிக்குரிய தருணங்களை பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கலாம். அவர் அதை பற்றி சிரித்துக்கொண்டே கூறுவார். இதனால், நீங்கள் உங்களது மாமியார் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் நன்றாக அறிந்து கொள்ள முடியும். 


மேலும் படிக்க | ஜாக்கிரதை! இந்த தவறுகள் விவாகரத்துக்கு வழிவகுக்கும்!


3.ஒன்றாக ஷாப்பிங் செல்வது:


துணி வாங்க, வீட்டுக்கு அழகு பொருட்கள் வாங்க என ஒன்றாக உங்கள் மாமியாருடன் ஷாப்பிங் செய்து பாருங்கள். நீங்கள் பேரம் பேசி வாங்க பயப்படுபவர் என்றால் அந்த வேலையை உங்கள் மாமியாரே முடித்து கொடுத்து விடுவார். ஷாப்பிங் என்றால் துணி அல்லது பெரிய பொருட்கள் வாங்க கடைகடையாக ஏறி இறங்க வேண்டும் என்று அல்ல. காய்கறி வாங்குவதற்கு, மளிகை பொருட்கள் வாங்குதற்கு, சூப்பர் மார்கெட் செல்வதற்கு என எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லலாம். இதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் நன்கு மனம் விட்டு பேசிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 


4.விளையாடலாம்:


ஆம், உங்கள் மாமியாருடன் நீங்கள் இணைந்து விளையாடவும் செய்யலாம். அது தனித்தனியாக விளையாடும் விளையாட்டாகவும் இருக்கலாம், ஒன்றாக இணைந்து விளையாடும் குழு விளையாட்டாகவும் இருக்கலாம். அவை வீட்டிற்குள் விளையாடும் போர்ட் கேம்ஸாக இருத்தல் சிறப்பு. செஸ், கேரம் போர்டு, தாயபாஸ், பரமப்பதம் போன்ற விளையாட்டுகளை உங்கள் மாமியாருடன் சேர்ந்து விளையாடலாம். இதனால் அவர் எந்த நேரத்தில் என்ன யோசிக்கிறார் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்குள் நல்ல பிணைப்பும் உருவாகும். 


5.ஒன்றாக ஹாபியை வளர்த்துக்கொள்வது:


நம் அனைவருக்குமே பொழுது போக்கிற்காக செய்யும் விஷயம் என்று ஏதாவது இருக்கும். ஒரு சிலருக்கு, எழுதுவது ஹாபி, ஒரு சிலருக்கு புத்தகம் படிப்பது ஹாபி, ஒரு சிலருக்கு தோட்டக்கலை ஹாபி. அது போல, உங்களது மாமியாருக்கு என்ன ஹாபியோ அதை தெரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து அந்த ஹாபியை வளர்த்துகொள்ளுங்கள். இது, உங்களுக்கிடையே நல்ல நெருக்கத்தை உருவாகும். அது மட்டுமன்றி ஒன்றாக ஸ்பா சலூன் செல்வது, பியூட்டி பார்லர் செல்வது போன்ற செய்கைகளும் உங்கள் மாமியாரை நீங்கள் கவர உதவும். 


மேலும் படிக்க | யாரிடம் வேண்டுமானாலும் பேசுங்கள்-‘இந்த’ 4 பேரிடமிருந்து மட்டும் விலகியிருங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ