காதலியை கொலை செய்து உடலை காரின் முன் இருக்கையில் வைத்து இளைஞர் ஜாலியா ஊர் சுற்றிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன், கழுத்தறுத்து கொலை செய்த காதலியின் உடலை காரின் முன் இருக்கையில் அமர வைத்து 45 நிமிடம் நகரை வலம் வந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5 வருடமாக காதலித்து வந்த இந்திய பெண்ணுடன், மால் ஒன்றின் வெளியே காருக்குள் இளைஞன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகராறு முற்றியதில் காதலியை கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 


மேலும், இறந்த காதலியின் சடலத்தை காரின் முன்சீட்டில் உயிரோடு இருப்பது போல செட்டப் செய்து உட்காரவைத்து துபாய் நகரை சுற்றி வந்த இளைஞன், ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பொறுமையாக தங்களிடம் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. "அவர் துணிகளில் ரத்தம் இருந்ததால் அவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று ஒரு போலீஸ் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


அவர் பயந்துபோய், தனது காதலியைக் கொன்றதாக என்னிடம் கூறினார். பாதிக்கப்பட்டவரின் உடல் முன் இருக்கையில் இருந்தது மற்றும் அவரது தொண்டை வெட்டப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. இரத்தத்தில் மூடப்பட்ட பின் சீட்டில் ஒரு பெரிய கத்தியைக் கண்டேன், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவருடன் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக உறவு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் அதிகாரியிடம் ஒப்புக்கொண்டார், ஆனால் சமீபத்தில் அவர் அவரை ஏமாற்றி மற்ற ஆண்களுடன் பேசுவதை கண்டுபிடித்தார்.


தனது காதலி வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததால் காதலியை கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய இளைஞன், துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.