7வது ஊதியக் கமிஷன் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். தற்போது, அகவிலைப்படி உயர்வுக்கு முன்பே ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் பெறும் அகவிலைபப்டி 42 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும். ஆம், இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக ஒவ்வொரு மாதமும் ரூ. 9,000 உயர்த்தும். இந்த அதிரடி உயர்வின் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலையில் அகவிலைப்படி அதிகரிக்கும்


மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வு ஜனவரி 2023 முதல் அமலுக்கு வந்தது. இப்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023 முதல் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த அதிகரிப்பும் 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும்


அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், ஊழியர்களின் கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களுக்கான அகவிலைப்படி, இனிவரும் காலங்களில் சம்பள உயர்வை கொண்டு வரலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: டிஏ ஹைக்குடன் டிஏ அரியர் தொகையும் கிடைக்குமா?


50 சதவீதத்தை அடைந்த பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாக இருக்கும்


அகவிலைப்படி விதி என்னவெனில், 2016-ம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியபோது, ​​அப்போது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டது. விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். மேலும் 50 சதவீதத்தின் படி, ஊழியர்களுக்கு உதவித்தொகையாகப் பெறும் பணம் அடிப்படை சம்பளத்துடன் அதாவது குறைந்தபட்ச சம்பளத்துடன் சேர்க்கப்படும்.


சம்பளம் 9,000 ரூபாய் அதிகரிக்கும்


உதாரணமாக, ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என்றால், அவருக்கு 50% டிஏ -வில் ரூ. 9,000 கிடைக்கும். ஆனால், அகவிலைப்படி 50% ஆன பிறகு, அது அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்பட்டு, மீண்டும் அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.


8வது ஊதியக் குழு: 


ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


சம்பளம் எவ்வளவு உயரும்?


ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு ஒரு முடிவை எடுத்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. தற்போது, ​​ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ளது. அதன் அடிப்படையில் அடிப்படை சம்பளம் ரூ.18,000 வழங்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 8,000 அதிகரித்து, அவர்களின் மொத்த சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். 


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது


2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி? சம்பள உயர்வு எப்போது?