கேது பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த ராசி மாற்றம் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மாற்றம் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்தார். 2023-ம் ஆண்டு வரை அவர் எங்கு இருப்பார். கேதுவின் இந்த மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். இந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.


மகரம்: 
மகர ராசிக்காரர்களுக்கு கேது கிரகத்தின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். கேது கிரகம் உங்கள் 11வது வீட்டில் பெயர்ச்சியாகியுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் பல புதிய ஆதாரங்களில் இருந்து பணம் பெறலாம். இதனுடன் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண ஆதாயங்களும் இந்த நேரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. 


வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்யக்கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். மொத்தத்தில் கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். 


மேலும் படிக்க | ஜூன் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும், தொட்டது துலங்கும் 


கடகம்: 
கேது கிரகம் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டிற்கு மாறியுள்ளது. இந்த இடம் மகிழ்ச்சி, தாயார், வாகனம் ஆகியவற்றுக்கான ஸ்தானமாக சொல்லப்படுவதால், கடக ராசிக்காரர்களுக்கு கேது கிரகத்தின் இந்த நிலை பலன் தரும். வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளராகத் தொடர விரும்புபவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். 


மேலும், இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தனிமையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் காதல் உறவில் ஈடுபடலாம். அதே சமயம் சொத்து, வாகனம் போன்றவற்றின் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதனுடன், இந்த நேரத்தில் தாயின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அன்னையின் மூலம் பண வரவும் இருக்கும். அதே சமயம் உத்தியோகத்தில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.


கும்பம்: 


உங்கள் ராசியிலிருந்து கேது கிரகம் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். மேலும், இந்த காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் வணிக பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறலாம். உயர் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, போட்டித் தேர்விலும் தேர்ச்சி ஆகியவை எளிதாக நடக்கும். ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டவர்கள் இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 


மேலும் படிக்க | வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா: சனீஸ்வரரின் பிறந்தநாளன்று செய்ய வேண்டிய தானங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR